இந்தியனே ..
தாண்டி விட்டோம்
எண்ணிக்கையில்
நூறு கோடியை தாண்டிவிட்டோம்
எண்ணங்களில் ....?
ஓ மனிதா..
மதப்பற்று உடையவன் என்பதற்கு
உன்னிடம் அடையாளங்கள் உண்டு
மனிதப் பற்று உடையவன்
என்பதற்கு..?
அடிக்கடித் தேர்தலையாவது
நடத்துங்கள்
படிக்க வசதியற்றவர்கள்
பள்ளிக்கூடத்தையாவது
பார்த்துக்கொள்ளட்டும்
தெரு விளக்குகள்
எரியாமலே இருக்கட்டும்
அப்போதுதான்
நம் தேசம்
நடுத் தெருவில் நிற்பது
உலகுக்கு தெரியாமலிருக்கும்
மனிதனோ
ஓடிக் கொண்டிருக்கிறான்
அவன் வாழ்க்கையோ
நொண்டிக் கொண்டிருக்கிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக